தெய்வத்தாய்...



ஆசையாய்  பெற்றெடுத்தாள்
அழகிய குழந்தை ஒன்று
கொஞ்சி மகிழ்ந்தினர் குடும்பத்தினர்
குழந்தையின் வளர்ச்சியிலோ
மாற்றங்கள் ஒன்றுமில்லை

நாட்கள் நகர நகர  மெல்ல புரிந்தது
மனவளர்ச்சி இல்லா குழந்தை என்று
மருத்துவர் கூறினார்
மற்றுமொரு யோசனை
நிறைவாய் மற்றொன்று
ஆரோக்கியத்துடன்  பெறலாமே  என்று

தீர்க்கமாய் மறுத்தாள்
பிள்ளையை அணைத்துக்கொண்டு
இன்னுமொன்று பெற்றால்
இதை கவனிக்க தவறுவோமோ  என்று…

இன்பமோ துன்பமோ
இக்குழந்தையே போதுமென்று
இறைவனிடம் மன்றாடினாள்  
என்
பிள்ளைக்கு அறிவையும்
நீண்ட
ஆயுளையும் கொடுப்பாயா என்று !


என் கண்களில்
அவள் தாய் அல்ல ..
தெய்வத்தின் உருவமாய்
அவளே தெய்வத்தாயாய் …
                                                   ~  அன்புடன் யசோதா காந்த் ~