விழிகளே ....






எனது விழிகளே ....
பலமுறை வேண்டியும்
பயனில்லை உங்களிடம்
மனதின் மர்மங்களை
அம்பலபடுத்தும் ஆயுதங்களே
அடிமைபோல் கேட்கிறேன்
உணர்ச்சிகளை மறைத்து கொள்ளுங்களேன்


காதல் தோல்வியால் துவண்டதையும்
கவலைகள் என்னை கலக்கியதையும்
பயம் எனும் பேய் பாடாய் படுத்தியதையும்
  பிரிவுகள் பல வந்து பித்தாய் அலைந்ததையும் 

யாரும் அறியாது உள்ளுக்குள் உருகுவதையும்
விழிகள் நீங்கள்  அறிவிப்பதேனோ ?
 
வலிகள் பலவகை  வருவினும்
விழிநீர் வடிக்காதீர்கள்

விசும்பலுடன் விண்ணபிக்கிறேன்
எனது விழிகளே ...

~அன்புடன் யசோதா காந்த் ~