குரங்கு ...மனம் ...





மனம் ஒரு குரங்காய்
மரம் விட்டு மரம் தாவி
இருக்கும் இடம் நில்லாமல்
இல்லாதோர் ஒரு  இடம் தேடி
பறக்க நினைக்கும் பறவை போல்
இறகுகள் இன்றி உயர பறந்தே
முடியாத பாதைகளில்
முக்கி  முனங்கி நடைபோட
தெரிந்த விடைகளையும்
துருவி துருவி கேள்வி கேட்டும்
போதுமென்ற நிறைவு இன்றி
பொருளுக்கும் பணத்திற்கும் ஆசைப்பட்டு
நடக்காத ஒன்றை நடக்காதோ என்றெண்ணி
எட்டா கனி என்றறிந்தும்
நிம்மதி இழந்து தவிக்கும்
மனம் ஒரு குரங்கு அன்றோ ....


~அன்புடன் யசோதா காந்த்~ 

அறிவுரை ...



 
மூத்தோர் சொல்கேட்ப்போம்
முக்கனிகளாய் இனிப்போம்
முழுமையாய் பயனடைவோம்

ஆன்றோர்களின் அறிவுரைகளோ
அறிவில் சிறக்க செய்திடுமே
ஆக்கம் பலபல  உருவாகுமே !

அறியா  வினாக்களுக்கெல்லாம்
பெரியோர்களன்றோ அகராதியாம்

இயற்கை வைத்தியங்களும்
இயற்கை  சீற்றங்களையும்
வியக்கும் வண்ணம் எடுத்துரைப்பாரன்றோ  !

வாழ்கையின் ரகசியங்களையும்
வகை அறிந்து உணர்த்திடுவாரன்றோ !
முதியோர் இல்லங்கள் ஒழியட்டும் 
அவர் நம் அன்பு பிணைப்பில் வாழட்டும்

முதியோர்களை போற்றுவோம்
முரண்பாடுகள் இன்றி வாழ்ந்திடுவோம்

~அன்புடன் யசோதா காந்த் ~