தாய்மை ,,எங்குதான் இல்லை ??????







தாயே 
உன்னைப்போல் யாருண்டு 
உள்ளம் பூரித்து வாழ்த்துகிறேன் 
ஐந்தறிவோ ஆறறிவோ
தாய்மை ஒன்றல்லவோ 
அவள் எண்ணங்களும் 
ஒன்றல்லவோ ...
சேயின் பசி தீர்த்து 
தானும் மகிழ்ந்திடுவாள் 


~அன்புடன் யசோதா காந்த் ~

தெய்வம் ...





தாய் பசுவின் மடி அது 
மானிடன் கைவசம் ஆதலால் 
பால் இன்றி தவித்த 
பாவம் கன்று அதற்கு
பாய்ந்து வந்து பசி ஆற்றினாள்
பாவை அவள் 
தாய்மையின் தவிப்பில் ...
பெண்ணல்ல அவள் 
தெய்வம் என கண்டேன்


~அன்புடன் யசோதா காந்த்

வர்ண ஜாலம் ..





வளைந்தும் நிமிர்ந்து நிற்கிறாள் 
தன் வண்ணங்களால் 


சிறிது நேர தோற்றமெனினும்
நினைவிலோ நீண்டதாய் 


வளைவினால் வானத்தை வளைக்கிறாள் 
வர்ணங்களால் ஜாலம் காட்டி 
வான வேடிக்கை காட்டுகிறாள் 


தன் அழகால் அவள் 
நம் இதயத்தை சுருட்டி அல்லவா செல்கிறாள் 


~அன்புடன் யசோதா காந்த~ 

குறையில்லை ....







விழிகளிலோ முழு நிறைவு 
எதுவுமில்லை குறைவு 
அன்னை அவள் தோள் ஆதரவில் 
உலகையே (அன்பில் )ஆளுவேன் ஆணவத்தில் 
தாய் அவள் கைகளில் இருந்தால் 
வேறெதுவும் தேவை இல்லையே ....


~அன்புடன் யசோதா காந்த் ~