12/10/2011 11:19:00 AM
|
by யசோதா காந்த்
உன் இதயத்தில்
உயிராய்
உறைந்திருக்க வேண்டும்
உன் விழிகளில்
பார்வையாய்
ஒளி பெற வேண்டும்
உன் இதழ்களில்
மொழிகளாய்
ஒலி பெற வேண்டும்
உன் கரங்களில்
காதலான சிறு குழந்தையாய்
தவழ வேண்டும்
உன் கூந்தலில்
தினம் நீ சூடும் மலராய்
மலரவேண்டும்
உன் நிழலாய்
நீங்காமல் உன்னுடனே
நடக்கவேண்டும் ..
~அன்புடன் யசோதா காந்த் ~