என் இதயமே ..











உன் இதயத்தில்
உயிராய்
உறைந்திருக்க வேண்டும்

உன் விழிகளில்
பார்வையாய்
ஒளி பெற வேண்டும்

உன் இதழ்களில்
மொழிகளாய்
ஒலி பெற வேண்டும் 

உன் கரங்களில்
காதலான சிறு குழந்தையாய்
தவழ வேண்டும்

உன் கூந்தலில்
தினம் நீ சூடும் மலராய் 
மலரவேண்டும்

உன் நிழலாய்
நீங்காமல் உன்னுடனே
நடக்கவேண்டும் ..



~அன்புடன்  யசோதா காந்த் ~

5 Responses
  1. மொத்தத்தில் ஓருயிராய் இருக்கவேண்டும் என்கிற
    காத்லர்களின் மன உணர்வை மிக அழகாகச் சொல்லிப் போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்



  2. ந்ல்ல கவிதை..... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com


  3. மொத்தத்தில் ஓருயிராய் இருக்கவேண்டும் என்கிற
    காத்லர்களின் மன உணர்வை மிக அழகாகச் சொல்லிப் போகும்
    அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்//

    மனமார்ந்த நன்றிகள் ரமணி அவர்களே !


  4. // Rishvan
    December 23, 2011 5:43 AM

    ந்ல்ல கவிதை..... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com// மனமார்ந்த நன்றிகள் ரிஸ்வான் அவர்களே ..கண்டிப்பாக உங்கள் வலை தளம் பார்க்கிறேன் ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..