காதலான காதலன் ..









காதலில் உயிரானவன்  
உலகிற்கு உயர்வானவன்
சுற்றி இருப்போர்க்கு உறவானவன்
தித்திக்கும் தேனாய் இனிப்பவன்
ஊருக்கு உதவுபவன்
என்னில் நிழலானவன்
தன்னில் பாதி எனக்கு தந்தவன்
நீதி நெறி தெரிந்தவன்
என் நெஞ்சம் நிறைந்தவன்
தஞ்சம் என வந்தோர்க்கு தயை செய்பவன்
அநீதிக்கு குரல் கொடுப்பவன்
அழகில் ஆணழகன்
உன்னை நான் அடைய
என்ன வரம் பெற்றேனோ

   ~ அன்புடன் யசோதா  காந்த் ~