உயிரிலே கலந்து .....








என் உயிரே
எந்தன் அழகே
நம்மக்குள் உள்ள காதலை
வடித்தேன் ஓர் கவிதையாய் ...

இமையாக நீ இருக்க 
இமைக்காமல் ரசிக்கின்றேன் 
சுமையாக நான் இருந்தும் 
சுவையாக சுமக்கிறாயே ...


பதுமையாக நீ இருக்க 
புதுமையாக பார்க்கிறேன் 
பனிதுளியாய் நீ இருக்க 
பரவசமாய் ரசிக்கிறேன் 

துயிலாமல் நீ இருக்க 
துடிப்போடு அணைக்கிறேன் 
துணையாக நீ இருக்க 
தொலைதூரம் பறக்கின்றேன் ...
மழையாய் நீ இருக்க 
உனக்குள் குளிர் காய்கின்றேன் 
அனலாய் நீ அணைக்க 
உன்னில் குளிர்கின்றேன் ....

எந்தன் உறவே ...

~அன்புடன் யசோதா காந்த் ~