உயிரிலே கலந்து .....








என் உயிரே
எந்தன் அழகே
நம்மக்குள் உள்ள காதலை
வடித்தேன் ஓர் கவிதையாய் ...

இமையாக நீ இருக்க 
இமைக்காமல் ரசிக்கின்றேன் 
சுமையாக நான் இருந்தும் 
சுவையாக சுமக்கிறாயே ...


பதுமையாக நீ இருக்க 
புதுமையாக பார்க்கிறேன் 
பனிதுளியாய் நீ இருக்க 
பரவசமாய் ரசிக்கிறேன் 

துயிலாமல் நீ இருக்க 
துடிப்போடு அணைக்கிறேன் 
துணையாக நீ இருக்க 
தொலைதூரம் பறக்கின்றேன் ...
மழையாய் நீ இருக்க 
உனக்குள் குளிர் காய்கின்றேன் 
அனலாய் நீ அணைக்க 
உன்னில் குளிர்கின்றேன் ....

எந்தன் உறவே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

13 Responses

  1. முதல் முறை உங்கள் தளம் வந்தேன்...
    கவிதை அருமை.
    வாழ்த்திக்கள்.


  2. நன்றி செ கதிர்வேலு அவர்களே


  3. நன்றி சே குமார் அவர்களே ...


  4. Admin Says:

    உயிரில் கலந்த உறவுதான்..அருமை.


  5. Unknown Says:

    என்ன ஒரு ஆழமான உணர்வு வரிகள்.
    அருமை, அருமை.


  6. Unknown Says:

    கனவோடு உறவாடும் கானல் நீர்,
    கற்பனையில் கவிபாடும் கவிஞர்,
    கரையேற நினைக்கின்ற நினைவு,
    கடலளவாய் கண்கவர் அன்பு,
    கவிதையல்ல வாழ்க்கை!


  7. நன்றி ,,,மதுமதி அவர்களே ...


  8. நன்றி ..ஜோசப் சகோ ..


  9. நன்றி சேகர் அவர்களே ..


  10. மழையாய் நீ இருக்க
    உனக்குள் குளிர் காய்கின்றேன்.
    அனலாய் நீ அணைக்க
    உன்னில் குளிர்கின்றேன்.
    - காதலின் இதம் சொல்லும் நேச வரிகள்.
    யசோ! நல்ல கவிதை


  11. மழையாய் நீ இருக்க
    உனக்குள் குளிர் காய்கின்றேன்.
    அனலாய் நீ அணைக்க
    உன்னில் குளிர்கின்றேன்.
    - காதலின் இதம் சொல்லும் நேச வரிகள்.
    யசோ! நல்ல கவிதை


  12. நன்றி திரு ஞானம் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..