பொய் ...




பொய் சொன்னதால்
இறந்ததே  என் மனம்
உயிர் அற்ற ஜடமாகி
உடலிலே ஊனமாகி
பேச்சின்றி ஊமையாகி
நானோ பாவியாகிபோனேனே ! 

அறியேன் இதற்குமுன்
இதுபோல் ஒருநிலை

கொலைக்குற்றம்  சிறிதாகி
என் பொய் குற்றம்
பெரிதானதே...

இல்லாத  ஒன்றை
இருப்பதாய் சொல்லி
சுயம் ஒன்றே
சிந்தனையாய்
யார் என்னை மன்னிப்பாரோ

தெய்வம் கூட பொறுக்குமா
பாவி நான் செய்த பாதகத்தை ..

~அன்புடன் யசோதா காந்த்~