வண்ணம்


உடுத்தினால்
ஏழு வண்ணத்தில் தான்
ஆடை உடுத்துவேன் என்று
அடம்பிடித்தாள்
வானவில் மங்கை .....
~ அன்புடன் யசோதா ~

மௌனவிரதம்...




நானும் இருந்தேன் மௌனவிரதம்
சிலமணிநேரங்கள் ...
அப்பப்பா முடியவில்லை ...
அப்பொழுதுதான் ஊமையின் தவிப்பு புரிந்தது ....
இறைவா உன்னால் முடிந்தால்
அவர்களுக்கு பேசும் சக்தி கொடு ..
இந்த மானிட பிறப்பின் மகிமையை பேசி மகிழட்டும்....
~ அன்புடன்  யசோதா ~

அன்பு ...



அன்பு பொய் சொல்வதில்லை
அன்பு பொறாமை கொள்வதில்லை
அன்பு எரிச்சல் அடைவதில்லை
அன்பு தீங்கு செய்வதில்லை
அன்பு சினம் கொள்வதில்லை
அன்பு பழி போடுவதில்லை
அன்பு பகைமை கொள்வதில்லை
அன்பு பாகு பாடு  பார்ப்பதில்லை
அன்புக்கு உயர்வு தாழ்வு இல்லை
அன்புக்கு ஏழை பணக்காரன் இல்லை
அன்புக்கு ஜாதி மதம் இல்லை
அன்புக்கு மொழி வேறுபாடு இல்லை ..
~ அன்புடன் யசோதா .. ~

அக்கா ..




தாய் சுமந்தாள் எனை பத்து மாதம்
ஆனால் நான் நடை பயிலும் வரை
என்னை இடுப்பில் வைத்து சோறூட்டி
தோளில் போட்டு தலாட்டி
என்னை சிரிக்க வைத்து
என் காதோரத்தில்  கதை சொல்லி
மகிழ்ந்த   அவளும்
எனக்கு தாய் போலத்தான் ,,,,,என் அக்கா..........
~ அன்புடன்  யசோதா ~

மலடி ...




ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டுக்கொரு மகப்பேறு 
அளவில்லா பூரிப்பும் 
எல்லையில்லா ஆனந்தமும் ..

பிள்ளைகள் வளரும் அழகை 
ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள்
விளையாட்டு பொருட்களையோ 
பொக்கிசமாய் பாதுகாத்தாள்..

சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை 
சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள்

 பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும் 
பால் கொடுத்த முலைகளும் ..
கருவை வளர்த்த கருவறையும் 
 மகிழ்ந்து ...கொண்டாடியது ...



மலடியாகவே இருந்திருக்கலாமே என
மனம் கசந்தாள் ..
அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை
அடைந்த போது ....

~ அன்புடன் யசோதா ..~