இவள் ஒரு ஏமாற்றுகாரி
நான் காதலிக்கிறேன் என்று தெரிந்தும்
என்னிடம் கண்ஜாடை காட்டி நிற்கிறாள்
பகலெல்லாம் முக்காடு இட்டு கொண்டு
இரவானால் மட்டும் முகம் காட்டுவாள்
ஒரு திங்கள்கொருமுறை
சிணுங்கி மருகி தேய்கிறாள்
பின் மெல்லமாய் வளர்ந்து
ஒளிவீசி மிளிர்கிறாள் ..
என்னை ராப்பாடியாய்
ராகம் பாடவைத்து
மேகதிரையில் மறைந்து
கண்ணாம் பூச்சி ஆட்டம் ஆடுகிறாள்
நான் மோகமாய் பார்ப்பதை கண்டு
மௌனமாய் சிரிக்கிறாள் ...
என்று தான் நானும்
நிலவு பெண்ணே ..உன்னோடு
பொன் நிலாகாலத்தில்
உலா வருவேனோ ..
உலா வருவேனோ ..
~ அன்புடன் யசோதாகாந்த் ~