கருப்பு வெள்ளை ...

   
அன்பே
என் கண்களில்
ஏதோ கோளாறு என்று நினைகிறேன்
கண் மருத்துவரிடம் போக வேண்டும்
ஏன் தெரியுமா ?????
நான் காணும் யாவும்
கருப்பு வெள்ளையாய்
தெரிகிறது....ஆனால்
நீயும்...உன் நினைவுகளும் ..
நம்மை பற்றி ..
நான் காணும் கனவுகளும்
வண்ண வண்ண நிறங்களாய்
என் கண்களில் .....
~ அன்புடன் யசோதா ~

எங்க வீட்டு வாசற்படி...



வீட்டுக்கு வாசல் படியும் திண்ணையும் அழகோ அழகு
ஆயிரம்நினைவுகளை  சொல்லும் பழைய வீடும் முற்றமும்
எனக்கு மட்டுமல்ல அம்மாவுக்கும் தோழி வாசல் படியே
தலை வாரி விடும்போதும் ...
கீரை ஆய்ந்து அரிசியில் கல்பொறுக்கும்போதும்...
வேலைகள் முடிந்து பக்கத்துவீட்டு மாமியிடம் ஊர்கதைகள் பேசும் போதும் அப்பாவிற்க்காய் காத்து இருக்கும் போதும்  ...
சண்டை குழப்பம் தீர சாய்ந்து உக்காரும்போதும் ...
மல்லிகை சூடி விளக்கேத்தும்போதும்....
வாசல்படிதானே ....அனைவருக்கும் தோழி  ...
எனக்குமட்டுமா...
எல்லோருக்குமே ...வாசல்படியில் கதைகள் உண்டே ...
நாகரீகம் கூடிபோனதாலே
வாசற்படியும் திண்ணையும் இல்லா
அடுக்கு மாடியில் குடித்தனம்
கண்மூடி கற்பனையாய் இல்லாததை இருப்பதாக
கண்ணில் நிறுத்தி பார்க்கிறேன் ...நான்
 எனில் நீங்களோ ?//??????????????????????
~அன்புடன் யசோதா காந்த்~












வெட்கம்..


அழகிய கண்கள்
எடுப்பான நாசி
சிவந்த கன்னங்கள்
இதழ்களை வர்ணிக்கவோ வார்த்தைகள் இல்லை
இடை அது இல்லவே இல்லை
இப்படி அவளை வர்ணித்து கொண்டே
இருக்கலாம் ..
ஆண் பெண் இருபாலரும் உற்று நோக்கியும்
வெட்கம் இல்லை
அந்த துணிக்கடை பொம்மைக்கு (பெண்ணுக்கு) ...
~ அன்புடன்  யசோதா ~