ஒற்றையடிப்பாதை ....




உன்னோடு நான் இருவழி பயணமாய் அதில் 
தனிமையில் தவிப்போடு நான் 
இன்பத்தில் கைகோர்த்து 
துன்பத்தில் விழி நீர் கோர்த்தும் 


ஒற்றையிலோ ...
மரங்கள் தலையாட்டும் சப்தமும் 
கூ கூ என கூவும் குயில் ஒன்றும் 
கீ கீ என கொஞ்சும் கிளி ஒன்றும் 
ஒற்றை பாதையிலும் ஓர் பாதையாய் 
நேர்கோட்டில் செல்லும் எறும்புகளும் 
என்னோடு துணையாய் ...


~அன்புடன் யசோதா காந்த் ~