பொக்கிஷம் ...

..







எழுதுவதும் வாசிப்பதும்
கிழித்து எறிவதும் தொடர்கதையாய்
மனதின் தேடல் கிடைப்பதுவரை
காகித துண்டுகள் மலைபோல் குவியலாய்

மனைவிக்கு கோபம்
வீட்டை சுத்தம் செய்தே
ஓய்ந்து விடவே

குழந்தைகளும் எச்சரித்தன எனை
குப்பைபோடாதீர்கள் என

என் ஊனமுற்ற கவிதைகள்
அவர்களுக்கோ வெறும் குப்பையாய்

இனி நானோ ..
ஆரோக்கியமான கவிதைகள் வரும் வரை

சேமிக்க தொடங்கினேன்
குறையாய் பிறந்த என் கவிதை குழந்தைகளை
குப்பையாக்காமல் பொக்கிஷங்களாய்..

~அன்புடன் யசோதா காந்த் ~