பொக்கிஷம் ...

..







எழுதுவதும் வாசிப்பதும்
கிழித்து எறிவதும் தொடர்கதையாய்
மனதின் தேடல் கிடைப்பதுவரை
காகித துண்டுகள் மலைபோல் குவியலாய்

மனைவிக்கு கோபம்
வீட்டை சுத்தம் செய்தே
ஓய்ந்து விடவே

குழந்தைகளும் எச்சரித்தன எனை
குப்பைபோடாதீர்கள் என

என் ஊனமுற்ற கவிதைகள்
அவர்களுக்கோ வெறும் குப்பையாய்

இனி நானோ ..
ஆரோக்கியமான கவிதைகள் வரும் வரை

சேமிக்க தொடங்கினேன்
குறையாய் பிறந்த என் கவிதை குழந்தைகளை
குப்பையாக்காமல் பொக்கிஷங்களாய்..

~அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. குப்பைத்தொட்டியை வைத்து ஒரு அழகான கற்பனை நயத்துடன் கவிதை. "ஊனமுற்ற கவிதைகள்"- நல்ல கற்பனை.


  2. நன்றி விச்சு அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..