பாழடைந்த கட்டிடத்தில்
தலைகீழாய் வவ்வால் ஒன்று
எங்கோ ஒரு மரத்தில்
பெரிய ஆந்தை ஒன்று
அந்த ஏரிக்கரையில்
சத்தமிடும் தவளை ஒன்று
தெரு மூலையில்
எதையோ பார்த்து குரைக்கும்
கருப்பு நாய் ஒன்று
காரணமே இன்றி
அங்குமிங்கும் குறுக்கே ஓடும்
வெள்ளை பூனை ஒன்று
தனிமையாய் சோக கீதம் பாடும்
சின்ன குயிலொன்று
இவைகளை போல தனிமையில் விட்டத்தை
வெறித்து பார்க்கும்
உனக்காய் தவிக்கும் உயிர் ஒன்று ..
~அன்புடன் யசோதா காந்த் ~