யாரைத்தான் வர்ணிப்பது ?
இது என்ன தேவதைகள் நகரமா ?
பார்க்க ஆயிரம் விழிகள் வேண்டுமோ ?அங்கும் இங்குமாய் ...
குட்டி குட்டி தேவதைகளும்உயரமாய் அழகிய விழிகளோடு ....
மூதாட்டிகளும் தேவதைகளே
பிரம்மனுக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை ?
இங்கு மட்டும் அழகாய் படைக்க?
சிறுவயதில் படித்திருக்கிறேன்
வானத்து தேவதைகளை
இப்போதோ
நேரிலும் காண்கிறேன் ...அழகான தேவதைகள் ...
அதே தேவதைகளை
ஓவியனாய் நான் இருந்தால்
ஓராயிரம் ஓவியங்கள் தீட்டிருப்பேன்
கவிஞனாய் இருந்தால்
கோடி கவிதைகள் வரைந்திருப்பேன்
~ அன்புடன் யசோதா காந்த் ~