அழகான தேவதைகள் ....................




இது என்ன தேவதைகள் நகரமா ?
பார்க்க ஆயிரம் விழிகள் வேண்டுமோ ?
யாரைத்தான்  வர்ணிப்பது ?

குட்டி குட்டி தேவதைகளும்
அங்கும் இங்குமாய் ...

மூதாட்டிகளும் தேவதைகளே
பிரம்மனுக்கு  ஏன் இந்த ஓரவஞ்சனை ?
இங்கு மட்டும் அழகாய் படைக்க?
சிறுவயதில் படித்திருக்கிறேன்
வானத்து தேவதைகளை
உயரமாய் அழகிய விழிகளோடு ....
இப்போதோ
நேரிலும் காண்கிறேன் ...

அதே தேவதைகளை
ஓவியனாய் நான் இருந்தால்
ஓராயிரம் ஓவியங்கள் தீட்டிருப்பேன்
கவிஞனாய் இருந்தால்
கோடி கவிதைகள் வரைந்திருப்பேன்
அழகான தேவதைகள் ...

   ~ அன்புடன் யசோதா காந்த் ~ 

9 Responses
  1. குழந்தை தேவதைகளா...


  2. கன்னம் குழிவிழ சிரிக்கும்
    குட்டி தேவதைகளின்
    அழகிய கவிதை

    நன்று சகோதரி.


  3. //சண்முகம்
    October 27, 2011 5:03 AM

    குழந்தை தேவதைகளா...//

    மனமார்ந்த நன்றிகள் சண்முகம் அவர்களே !


  4. // மகேந்திரன்
    October 27, 2011 8:45 PM

    கன்னம் குழிவிழ சிரிக்கும்
    குட்டி தேவதைகளின்
    அழகிய கவிதை

    நன்று சகோதரி.//

    உங்கள் உற்சாகம் தரும் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !


  5. மிகவும் அருமை அக்கா ....


  6. மிகவும் அருமை அக்கா ....


  7. //பாலாசி (ஜி) தமிழன் குவைத்
    October 28, 2011 2:51 PM

    மிகவும் அருமை அக்கா ....//

    மனமார்ந்த நன்றிகள் தம்பியே !


  8. lhjk Says:

    தேவதைகள் என்றாலே அழகுதான்

    உங்கள் வரிகள் கோர்த்து அழகான தேவதையாக்கிவிட்டீர்கள் ...


  9. // lhjk
    October 30, 2011 9:38 PM

    தேவதைகள் என்றாலே அழகுதான்

    உங்கள் வரிகள் கோர்த்து அழகான தேவதையாக்கிவிட்டீர்கள் ...

    மனமார்ந்த நன்றிகள் lhjk அவர்களே !


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..