விடைகள் இல்லா வினாக்கள் .....




ஆயிரம் ஆயிரம் துறைகளிலே
ஆதிக்கம் செலுத்துவோரோ
ஆயிரம் ஆயிரமே
ஆள் பலம் பண பலம்
உடையவற்கோ

தரம் இல்லையெனினும்
முதலாய் உயர்பதவிகளில்
கல்வியோ .விளையாட்டிலோ
திறமை உள்ளவரோ
ஏழை என்ற காரணத்தால்
ஏற்றங்கள் எட்டவில்லை
ஏற்றி விடும் ஏணிகளும்
ஏழை அவனுக்கு இல்லை
பட்டங்களும் சான்றிதழ்களும்
வறுமை எனும்
இருண்ட சிறைதனிலே
என்று மாறும் இந்த நிலை ?
விடைகள் இல்லா வினாக்களே ...


~ அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. வினா இங்கே
    பதிலெங்கே?
    பதில் கிடைக்கும் நாள் தான் எப்போது?
    விடை கிடைக்கும் நேரத்தில்
    குடியரசு என பெருமை கொள்வோம்.

    அருமையான கவி சகோதரி.


  2. மகேந்திரன்
    October 29, 2011 5:19 AM

    // வினா இங்கே
    பதிலெங்கே?
    பதில் கிடைக்கும் நாள் தான் எப்போது?
    விடை கிடைக்கும் நேரத்தில்
    குடியரசு என பெருமை கொள்வோம்.

    அருமையான கவி சகோதரி. //

    மனமார்ந்த நன்றிகள் சகோதரரே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..