4/29/2013 12:41:00 PM
|
by யசோதா காந்த்
மலடி ...
************
ஆணென்றும் பெண்ணென்றும்
ஆண்டுக்கொரு மகப்பேறு
அளவில்லா பூரிப்பும்
எல்லையில்லா ஆனந்தமும் ..
பிள்ளைகள் வளரும் அழகை
ஆயிரம் கண்கொண்டு கண்டு ரசித்தாள்
விளையாட்டு பொருட்களையோ
பொக்கிசமாய் பாதுகாத்தாள்..
சுவற்றில் குழந்தைகளின் கிறுக்கல்களை
சுண்ணாம்பு பூசாமல்..ஓவியமாக்கினாள்
பட்டம் பெற்றபோதும் ..பதவிகள் அடந்தபோதும்
பால் கொடுத்த முலைகளும் ..
கருவை வளர்த்த கருவறையும்
மகிழ்ந்து ...கொண்டாடியது ...
மலடியாகவே இருந்திருக்கலாமே என
மனம் கசந்தாள் ..
அடைக்கலமாய் முதியோர் இல்லத்தை
அடைந்த போது ....
~ அன்புடன் யசோதா ..~