மௌனவிரதம்...




நானும் இருந்தேன் மௌனவிரதம்
சிலமணிநேரங்கள் ...
அப்பப்பா முடியவில்லை ...
அப்பொழுதுதான் ஊமையின் தவிப்பு புரிந்தது ....
இறைவா உன்னால் முடிந்தால்
அவர்களுக்கு பேசும் சக்தி கொடு ..
இந்த மானிட பிறப்பின் மகிமையை பேசி மகிழட்டும்....
~ அன்புடன்  யசோதா ~

4 Responses

  1. அறிவு இருக்கா இல்லையா ?
    அறிவு இருக்கா இல்லையா ?


    அறிவு இருக்கா இல்லையா ?என்பது நாம் அனைவரும் மற்றவர்களைப் பார்த்து அடிக்கடிக் கேட்கும் கேள்வியாகும் .நமக்கு அறிவு எப்படி விளங்க்குகின்றது என்பதை பார்ப்போம் .மனித பிறப்பு உயர்ந்த பிறப்பு ஏன் று சொல்லுகிறோம் .மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளதாக கருதுகிறோம் .எப்படி ஆறு அறிவு என்பதை .உயிர்களின் பரிணாம வளர்ச்சியை வைத்து .ஆறாவது பிறவி, ஆதலால் ஆறாவது அறிவு மனிதனுக்கு விளங்குவதாக கருதுகிறோம்.இல்லையா ?அது தவறான கருத்தாகும் .

    அறிவு என்பது இரண்டு வகைப்படும்.உண்மை அறிவு .பொய் அறிவு என இரண்டு வகைப்படும் .நாம் இப்பொழுது உண்மை அறிவோடு செயல் படுகிரோமா?பொய் அறிவோடு செயல் படுகிரோமா?என்பதை சிந்திப்போம் .நம் உடம்பில் இந்திரியங்கள் ,கரணங்கள்.ஜீவன் ,ஆன்மா என்ற நான்கு பாகங்கள் இயங்கிக் கொண்டு கொண்டு உள்ளன .இந்திரியங்கள் என்பது ;--கண், மூக்கு ,வாய் .காது.உடம்பு என்னும் மெய் என்பதாகும் .கரண்ங்கள் என்பது ;-மனம் ,புத்தி ,சித்தம் அகங்காரம் .ஆச்சர்யம் .என்பதாகும் .--ஜீவன் எனபது உயிர் என்பதாகும் .ஆன்மா என்பது உடம்பை இயக்கம் சக்தி வாய்ந்த ஒளியாகும் .

    இந்த நான்கு பிரிவுகளின் வாயிலாக அறிவு செயல்படுகிறது .இதில் எது உண்மை அறிவு? .எது பொய் அறிவு? --போன்ற செயல்களை கொடுக்கிறது என்பதைப் பார்ப்போம் .இந்திரியத்தால் அறிவது இந்திரியக் காட்சி ,இந்திரிய அறிவு என்பதாகும் .--கரணத்தால் அறிவது கரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் .ஜீவனால் அறிவது ஜீவக் காட்சியாகும் ஜீவ அறிவு என்பதாகும் .ஆன்மாவினால் அறிவது ஆண்மக் காட்சியாகும்,ஆன்ம அறிவு என்பதாகும் .

    இதில் எது உண்மை அறிவைக் கொடுக்கும் .எது பொய் அறிவைக் கொடுக்கும் .

    இந்திரியங்கள் .கரணங்கள் வாயிலாக தோன்றும் அறிவு பொய் அறிவாகும் .ஜீவன் ஆன்மாவின் வாயிலாக தோன்றும் அறிவு உண்மை அறிவாகும் .நமக்கு இந்திரியங்கள் கரணங்கள் வாயிலாகத்தான் அறிவு செயல்ப பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஜீவன் ஆன்மாவின் வாயிலாக செயல் படுவதில்லை .அவை எப்படி என்பதைப் பார்ப்போம் .

    ஒரு பொருளை அதன் நாம ரூபமின்றிக் காண்பது இந்திரியக் காட்சி இந்திரிய அறிவு என்பதாகும் .உருவமாக பார்ப்பது காரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் .இன்னதென்று அறிவது ஜீவக் காட்சி ஜீவ அறிவு என்பதாகும் .எதையும் தானாக அறிதல் ஆண்மக் காட்சி ஆன்ம அறிவாகும் .இவைகளில் எவை உண்மை அறிவு எவை பொய் அறிவு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ..

    இதற்கு ஞாயம் யாதெனில் ;--

    நஷ்த்திரபிரகாசம் போல் தோன்றிய இந்திரியங்கள் ,கரணங்கள், ஜீவ அறிவே உபாய ஞானம் என்பதாகும்.சந்திரப் பிரகாசம் போல் தோன்றி அறியும் அறிவே ஆன்ம அறிவாகும் .இவை உண்மை ஞானமாகும் .எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற அறிவே கடவுள் அறிவாகும் .இதற்கு அனுபவ ஞானம் என்பதாகும் ..
    அறிவு ;--

    தோன்றும் அறிவு
    தோற்றுவிக்கும் அறிவு
    பதி அறிவு அதாவது கடவுள் அறிவு

    என்பதாகும்;- இதில் எந்த வகை அறிவு நம்மிடம் உள்ளது .இந்திரியங்களும் காரணங்களும் பொய் அறிவை கொடுக்கும் .ஜீவனும் ஆன்மாவும் உண்மை அறிவைக் கொடுக்கும் .உண்மை அறிவு முழுமைப் பெரும் போது கடவுள் அறிவு விளங்கும் .ஆதலால் மனிதனுக்கு ஆறு அறிவு என்பது இல்லை உண்மையை அறியும் அறிவு மெய்அறிவு என்பதாகும் .பொய்யை அறியும் அறிவு பொய் அறிவு என இரண்டு அறிவுதான் உள்ளன என்பதை உணர்வோமாக !

    ஆதலால் ஒரு பொருளின் இடத்தில் பற்றுதல் அவா என்பதாகும் .--அதை அனுபவிக்க வேண்டும் என்று எழுவது ஆசை என்பதாகும் .அதன் மயமாக இருப்பது காமம் என்பதாகும் .அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகமாகும் .எந்த வஸ்த்து இடத்திலும் ஆசை காமம் மோகம் இருப்பது பொய் அறிவாகும் .அவா மாத்திரம் இருப்பது உண்மை அறிவாகும் .சிந்திப்போம் செயல் படுவோம் .

    வள்ளலாரின் கருத்துகளாகும் !

    அன்புடன் ஆன்மநேயன் .கதிர்வேலு.


  2. நன்றி நண்பர் ராஜன் நெல்லை அவர்களே


  3. நன்றி செங்கதிர் சார் ,...நன்றி உங்கள் உரை நன்றாக இருந்தது .


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..