பொய் ...




பொய் சொன்னதால்
இறந்ததே  என் மனம்
உயிர் அற்ற ஜடமாகி
உடலிலே ஊனமாகி
பேச்சின்றி ஊமையாகி
நானோ பாவியாகிபோனேனே ! 

அறியேன் இதற்குமுன்
இதுபோல் ஒருநிலை

கொலைக்குற்றம்  சிறிதாகி
என் பொய் குற்றம்
பெரிதானதே...

இல்லாத  ஒன்றை
இருப்பதாய் சொல்லி
சுயம் ஒன்றே
சிந்தனையாய்
யார் என்னை மன்னிப்பாரோ

தெய்வம் கூட பொறுக்குமா
பாவி நான் செய்த பாதகத்தை ..

~அன்புடன் யசோதா காந்த்~



3 Responses
  1. அப்படி என்ன பொய் சொன்னீங்க என்னினும் அருமை



  2. நன்றி சசிகலா அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..