வாழ்க்கை ....





தேனினும்
இனிமை உண்டோ ?
வேம்பின்  சுவையும்
விரும்புவார் உண்டோ ?

இறைவன் தந்த வாழ்வினிலே
இனியவை  மட்டும் அனுபவித்து
துன்பம்  தவிர்க்க முடியுமோ?

இன்பத்தில் இன்புறும் மானிடன்
துயரத்தால் துவளுவதேனோ ?

உலகின் உயிர்கள் எல்லாம்
ஒரே நிலை அடைய முடியுமோ?
பஞ்சு மெத்தையில் ஒருவனும்
வீதியோர மண்படுக்கையில்
மற்றொருவனும்  ஏனோ? 

முரண்பாடான கேள்விகளுடன் ...
முறையான பதிலை தேடி ...(?)


~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses

  1. ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இருப்பதில்லையே அது போலவே வாழ்க்கையும் தேடல் இல்லாமல் கிடைக்கும் எதுவும் இனிக்காது அருமை


  2. நன்றி துரை டேனியல் அவர்களே


  3. நன்றி சசிகலா அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..