புதிய சமுதாயம் படைப்போம் என்று உறுதிமொழி எடுப்போம் ....










அன்னையர் தினம் ..நண்பர்களுக்குள்ளே வாழ்த்துக்கள் பரிமாறி ...தாயின் பெருமைகளை வாழ்த்திகொண்டும் ...கவிதைகள் பல புனைந்தும் .ஆனந்தமாக அனைவரும் இருந்த பொழுதோ ..நண்பர் ஒருவரின் ..கேள்வி ..மனதை கலங்க செய்தது ,,,பெண் என்பவள் ..அன்னையாகவும் ..சகோதிரியகவும் ..தோழியாகவும் ..காதலியாகவும் ..மகளாகவும் ,,,இன்னும் பல வித பாத்திரங்களில் தனது கடமையை செவ்வனே செய்கிறாள் ஆனால் மாமியார் எனும்  பாத்திரம் மட்டும் ...தன் கடைமைகளை சரிவர செய்யாமல் ...கேள்விக்குறியாகவே இருக்கிறதே என்று கூறினார் ....சிந்தியுங்கள் அன்பு தோழிகளே உண்மைதான் ...இன்று நாம் படும் அதே வேதனைகளைதானே ..நம் வருங்கால பெண்  இனம் அனுபவிக்கும்  ...இன்று நம் ஆண் குழந்தைகள் சிறியவர்கள் ..நாளை அவர்கள் வளர்ந்து பெரிதாகும் போது நம் மனங்களும்  மாறித்தான் போகுமோ ...வேண்டாம் அன்பின் தோழிகளே ...நாம் அன்னையாகவே இருப்போம் நம் வீட்டிற்கு வரும் மருமகளிடம் ...வரதட்சணை கேட்க்கமட்டோம் என்றும் ...நம் வீட்டிற்கு வரும் நம் மருமகள் புகுந்த வீடு என்று நினைக்காமல் அதையும் அவர்கள் பிறந்த வீடாய் கருதும் படி ...அன்பினால் அரவணைப்போம் ...என்றும்

இன்று உறுதி கொள்வோம் ...புதிய சமுதாயம் படைப்போம் ..அன்னையாகவே வாழ்வோம்

நன்றி வணக்கம்

~அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. Admin Says:

    அன்னையர் தின செய்தி சிறப்பு.உங்களுக்கு எனது அன்னையர் தின வாழ்த்துகள்..


  2. நன்றி மதுமதி சார் ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..