காதலில் உயிரானவன்
உலகிற்கு உயர்வானவன்
சுற்றி இருப்போர்க்கு உறவானவன்
தித்திக்கும் தேனாய் இனிப்பவன்
ஊருக்கு உதவுபவன்
என்னில் நிழலானவன்
தன்னில் பாதி எனக்கு தந்தவன்
நீதி நெறி தெரிந்தவன்
என் நெஞ்சம் நிறைந்தவன்
தஞ்சம் என வந்தோர்க்கு தயை செய்பவன்
அநீதிக்கு குரல் கொடுப்பவன்
அழகில் ஆணழகன்
உன்னை நான் அடைய
என்ன வரம் பெற்றேனோ
~ அன்புடன் யசோதா காந்த் ~
அன்பின் யசோதா ..
கவிதை அருமை .. உங்களவர் கொடுத்து வைத்தவர் ..
வாழ்த்துக்கள் யஷோதா ..
அன்புடன்
விஷ்ணு ..
நன்றி அன்பின் விஷ்ணு அவர்களே ...நானும் கொடுத்துவைத்தவளே ..
நிறைந்த வாழ்வின் வரிகள். வாழ்த்துகள்.
இதே போல பாமாலிகை (காதல்) தலைப்பின் கீழ்
என் வலையில் வாசிக்கலாம். நல்வரவு.
(பாமாலிகை - பாக்களின் மாலை.)
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
அருமையான அன்பின் பகிர்வு
உண்மையான வரிகள்!வாழ்த்துக்கள் சகோதரி!
உண்மைவிரும்பி.
மும்பை.
நன்றி சகோ இலங்காதிலகம் அவர்களே ..
நன்றி சசிகலா அவர்களே ..
நன்றி உண்மை விரும்பி அவர்களே ..