நெஞ்சை கிழிக்கும் உணர்வுகளை
சொல்லால் சொல்ல முடியவில்லை
நினைவில் நிற்கும் பதிவுகளை
கனவால் கூட அழிக்க முடியவில்லை
நீ கொடுத்த முத்தங்களை
என் நிழலும் கூட மறக்கவில்லை
நம் விரல்கள் பின்னி நடந்ததை
அந்த கடற்கரை மணலும் மறுக்க வில்லை
உன்னை தவிர வேறொரு பெண்ணை
என் கண்கள் காணபோவதில்லை
கோபம் எறிந்து வந்துவிடு கண்ணே
சொர்க்கம் நமக்கு தூரமில்லை
~அன்புடன் யசோதா காந்த்~
அருமை .. தொடரட்டும் கவிப்பயனம்...
அருமை அருமை
நெஞ்சைக் கிழிக்கும் உணர்வுகளை
மிக அழகாக கவிதையாக்கிவிட்டு
சொல்லால சொல்ல முடியவில்லை என
அடக்கமாகச் சொல்லியுள்ளதை மிகவும் ரசித்தேன்
மனம் கவர்ந்த கவிதை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2
உணர்வுகள் ஞாபகங்களாக துரத்தும்போது........... இக்கவிதை விளைந்ததோ? அருமை தோழி. தொடருங்கள்.
நீங்கள் நிச்சயமாக திரைப்பாடல்களை எழுத முயற்சிக்கலாம். நீங்கள் எழுதும் எழுத்துக்கள் அற்புதமானவை.
நன்றி மதி அவர்களே
நன்றி ரமணி அவர்களே
நன்றி வே.சுப்பிரமணியன் அவர்களே
நன்றி விச்சு அவர்களே