புல்வெளி ....









சில்லென்று வீசும் காற்று
சத்தமின்றி சொன்னது என் காதில்
உன்னவன் கார் மேகமாய் மாறி
உன்னில் மழை பொழிவான் என்று

காத்திருந்த நானோ கண்மூடி அனுபவித்தேன்
பூமிதனில் புல்வெளியாய் நான் படுத்துறங்க
நீ தரும் நீர் துளியால்
மெல்ல மெல்ல நனைந்து
ஈர ஆடை உடுத்தி நான்
மேனியெங்கும் நீ தழுவ
குளிரிலும் முத்து முத்தாய்
வேர்வைபோல் என் உடலில்
பனிதுளியாய் நீ ...

~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. கவிதையின் ஆரம்ப வரிகளே அசத்தல்...


  2. புல்லையும் மழைத்துளியையும் வைத்து இத்தனை அருமையான கவிதையா ...!


  3. நன்றி சிட்டுகுருவி அவர்களே ,,,


  4. நன்றி வரலாற்று சுவடுகள் அவர்களே ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..