சிநேகிதியே .....







சினேகிதியே..


உன்னோடு என் நாட்கள் '
எத்தனை தித்திப்பாய்..
என் இரவுகளில் பூ மெத்தையே படுக்கையாய் ..


உன்னை பிரிந்த நாள் முதல் 
'நெரிஞ்சிமுள் மெத்தை மேல் என் உறக்கம் 


அன்றோ காற்றுக்கும் பொறாமையடி
நம்மில் இடைவெளி இல்லையென 
இன்று பூக்களுக்கும் பரிதாபம் 
'நம்முள் இலையுதிர்   காலம் என்று ..
என்று வரும் நமக்கு மற்றுமொரு 
வசந்த காலம் ஏக்கத்துடன் உன்னவன் ..


~அன்புடன் யசோதா காந்த் ~ 

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..