புரியாத புதிராய் ...











புரியாத புதிராய்
என்னுள் பதிந்தாய்
புயலென என்னை
புரட்டிப் போட்டாய்
கலையாத   கனவாய்
மனதில் நின்றாய்
சின்ன சின்ன சிணுங்கல்களோடு
சண்டைகள் தொடர்ந்தாய்
மின்னலை போலே மின்னி மறைந்தாய்
உயிரோடு கலந்தவனே
என் உண்மை நிலை நீ அறியாயோ ?
நம் நெருக்கத்தின் நாட்களை
நம் பிரிவின் நொடிகள் கொன்றுபோட்டதே
நான் துவளும் நிலை நீ தெரிந்தாயோ ?
நீயும் என் நிலை தானோ ?
நிலை அறியாது துடிக்கிறேன் என் அன்பே
வினாக்கள் பல என்னில் .....
பதில் கூறாயோ
எனை சேராயோ
என் உயிரே ...

~அன்புடன் யசோதா காந்த் ~

4 Responses
  1. தாரிணி Says:

    நம் நெருக்கத்தின் நாட்களை
    நம் பிரிவின் நொடிகள் கொன்றுபோட்டதே
    நான் துவளும் நிலை நீ தெரிந்தாயோ ?
    நீயும் என் நிலை தானோ ?
    நிலை அறியாது துடிக்கிறேன் என் அன்பே // அருமை


  2. நன்றி அன்பு தங்கை தாரணி செல்லமே ...


  3. அருமையான உணர்வோட்டம்.. வாழ்த்துக்கள்..


  4. நன்றி இடிமுழக்கம் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..