விட்டு சென்றாயோ ?




விட்டு சென்றாயோ ?
***********************
நீ மீட்டும் வீணையாய் நானிருந்தேன்
மீளா துயரத்தில் ஆழ்த்தி விட்டாய்

காணும்பொருள் எல்லாம் நான்என்றுரைத்தாய்
காடு  மலை தாண்டி செற்றுவிட்டாய்

தேடல் எல்லாம் என்னுள் அடக்கம் என்றாய்
தெரிந்தே என்னை தொலைத்துவிட்டாய்

கள்வன்போல் பதுங்கி நின்றுஎன்னை
கவனிப்பதை நான் அறியேனோ ?

இடைவெளி நம்மில் உண்டெனினும்
உன் அசைவுகள் ஒவ்வொன்றும் தெரிந்தனவே

கணக்காய்  யாவையும் வைத்துள்ளேன்
நீ காரணம் கேட்கையில் விடை சொல்ல

வியப்பாய் நிற்பதும் நான்மட்டுமல்ல
நீ விதைத்து சென்ற வார்தைக்களும்தான்

விளக்கின் திரி தீரும்முன்
விரைவாய் நீயும் வந்துவிடு ...

~அன்புடன்
~யசோதா காந்த் ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..