கனவுகள் ...







தினமும் இரவுகளில்
இன்ப  கனவுகளில்
அழகாய் வருவாள் பெண்ணொருத்தி
வண்ண ஆடைகள் உடுத்தி
செல்லமாய் கதை சொல்வாள் காதோரத்தில்
அவள் குரலோ ராகமாய்
கிளிபேச்சின் கொஞ்சலாய்
என் மனதிலும்
நாத ஒலியும்..மிருதங்க தாள  ஒலியும்
அவளின் ராகமும்
என் தாளமும்  சங்கீதமாய்
ஆடலும் பாடலும்  விடியும் வரை
விடிந்த பொழுதோ
எல்லாம் மாயமாய்
எனினும் காத்திருப்பேன்
இனிய இரவுகளுக்காய்
என்னவள் வரும்  கனவுகளுக்காய் .....
~ அன்புடன்  யசோதா காந்த் ~

2 Responses
  1. அருமை தோழிஅருமை தோழி


  2. vivekrocz...............நன்றி நண்பரே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..