மறக்க முடியவில்லை..


என் கண்களில் நீ
என் நெஞ்சினுள்  நீ
என் உணர்வுகளில் நீ
என் உயிரினில் நீ
என் உடல் பொருள் ஆவி நீ

இன்று நீ இல்லாத என் நிலை
கண்கள் இரண்டும் பிடிங்கியதுபோல்
நெஞ்சை கசக்கி பிழிந்ததுபோல்
உணர்வுகளை கொன்று போட்டது போல்
உயிரை என்னிடம் இருந்து பறித்து கொண்டது போல்
வழி அறியாது
நிலை குலைந்து
என்னை நினைக்காமல் நீயும்
உன்னை மறக்க முடியாமல் நானும்
சாகாமல் உயிரற்றவளாய் ....
~ அன்புடன்  யசோதா காந்த் ~

0 Responses

எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..