ஈகோ

விட்டு கொடுக்கும் எண்ணம் 
 எள்ளளவும் இல்லையே என்னிடம்
பிடிவாதம் ஒன்றே...தொடரும் 
தொடர்கதையாய் ..
பேசி தீர்க்கும் விஷயத்திற்கெல்லாம் 
பேசாமல் இருந்து பெரிதாக்கி ..
நான் தொலைத்த உறவுகள் 
மீண்டும் கிடைக்குமோ ?
கொஞ்சி மகிழ்ந்த ,
ஆறாம் வகுப்புதோழி 
எனக்காய் அழுத .
எட்டாம் வகுப்பு கமலா 
எதையும் எனகாய்  செய்யும் 
கல்லூரி நட்பு மீனா 
இன்னும் எத்தனை எத்தனை 
நடப்புக்களை நான் இழந்தேன் 


பாழாய் போன ஈகோ வந்திராவிட்டால் ....
இன்று இருப்பார்ள் என் அருகே
என் உயிர் தோழிகள்  ..


பாழும் ஈகோ நட்பிடம் கூட
விலை பேசி நிற்கிறதே ...
இன்றுவரை எனக்குள் ........
~ அன்புடன் யசோதா காந்த்~


1 Response
  1. pearl Says:

    konjam yoshingal yevalavu ego irkirathu entru


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..