பிரிவு ...........




நாள் நட்சத்திரம்
ஜாதக பொருத்தம் பார்த்தும்
வேதங்கள் மந்திரம் ஓதியும்
நவீனமுறையில்  பதிவு செய்தும்
சேர்ந்த திருமண பந்தங்களே ..
 
காலம் சில சென்ற பின்
பிரிவென்று வருகிறதே
இறைவன் படைத்த உயிர்கள் அனைத்தும்
இணைந்து வாழதானே ..
ஐயிந்தறிவுகளே ஆனந்தமாய்
கூடி குலாவுகின்றன நன்றாய்
ஆறறிவு உள்ள நாமோ
விட்டு கொடுக்க மறுத்தும்
அன்பு செய்ய மறந்தும்
அவதி படுவதேனோ ?? 
 
மனங்களை ரணங்களாக்கி
விவாதம் பொதிந்த விவாகரத்துக்களே
பிரிந்த பின்போ துயரத்திலே
ஏனோ இந்த நிலைமை
வாழ்க்கை ஒருமுறையல்லவா 
வாழ்ந்திடுவோம் இன்பமுற
வையகத்திலே....

  ~  அன்புடன் யசோதா காந்த்  ~ 

8 Responses
  1. வலைப் பதிவின் வடிவமைப்பு வெகு அழகு!
    கவிதைகளும் கருத்தாழம் உள்ளவையே.
    இன்னும் எழுதுங்கள்.


  2. திருமணம் எவ்வக்கையாயினும்
    நன்கு புரிந்து வாழ்க்கை நடத்துதல் நலமே...

    அருமையான கவி சகோதரி...



  3. நன்றி பரமசிவம் அவர்களே


  4. நன்றி சகோ ,மகேந்திரன் அவர்களே


  5. நன்றி பைசூர் ரஹ்மான அவர்களே


  6. sitham Says:

    No wonder. Conditional love is always on condition. 6th sence is always divisible. Let every thing in its own place. Thank you allowing me to comment on your wonderful creations yasotha Kanth.


  7. நன்றி சிதம் அவர்களே


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..