ஓயாத அலைகள்............



கடல் அலையே
நீயும் எனை போல்  வழிமேல் விழிவைத்து
யார் வரவை நோக்கி காத்திருக்கிறாயோ ?



என் உள்ளின் தவிப்பை
உன்னுள்ளும் காண்கிறேனே 


சலிப்பின்றி  ஓயாமல்
வந்து வந்து செல்கிறாயே 


திரும்பி செல்லும் உன் முகத்திலோ
மீண்டும் வரும் புறப்பாடே..


விட்டு சென்ற காதலன்
மனம் கனிந்து வருவான் என காத்துருகின்றயோ ?


என் கண்ணீர் உப்பு சுவை சிறிதளவே
நீ வடித்த கண்ணீரோ ..
உப்பாகவே மாறுகிறதே 
!


நம் இருவரின் தேடலின் முடிவேன்றோ ?
போய் சேரா ஊர்தேடி பயணமோ
நீயும் நானும் ..................???????????


~அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. எதிர்பார்ப்புகள் உலகில் இருந்துகொண்டுதான் இருக்கும்.ஏமாற்றங்கள்தான் மிஞ்சும்.
    'என் கண்ணீர் உப்பு சுவை'- திருத்திவிடுங்கள்.


  2. நன்றி நண்பர் விச்சு அவர்களே ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..