இனியொரு ஜென்மம்...




இனியொரு ஜென்மம் வேண்டும்
இரவலாய் இறைவனிடம் கேட்பேன்

பேசி தீராத கதைகள் பேச
மீண்டும் ஒரு ஜென்மம் நமக்கு

நீயும் நானும் வாழ
மாய தீவு ஒன்றும்


பூந்தோட்டம் ஓன்றும்
உன்னைப்போல் அழகான பூக்களும்

நம் காதலுக்கு காவலாய்
இயற்கை அன்னையும்

நம் காதலில் கை கொடுக்கும்
நல்ல நண்பர்கள் கூட்டமும்

அன்பே உன் தோழியராய்
தேவலோக மங்கைகளும்

இனிதாய் நம்முடன்
இழந்த சில சொந்தங்களும்

கேட்டதை தந்திடும் 
அற்புத விளக்கொன்றும் 

இன்பமாய் அன்பே
இன்புற நானும் நீயும்

புத்தம்புது ஜென்மத்தில்

~ யசோதா காந்த் ~

2 Responses
  1. Prem S Says:

    எத்தனை வேண்டும் கொடுப்பாரா கடவுள் கவிதை அருமை


  2. நன்றி சி பிரேம் குமார் அவர்களே ..


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..