அன்னை போல நீயும் .....







அன்பே என் தாயின் அணைப்பை
உன்னில் உணர்ந்தேனே
தாய் அவள் தவிப்பை
உன்னில் அறிந்தேனே

அன்னை அவள் பரிவை
உன்னில் கண்டேனே
அன்பான  அவள் கொஞ்சல்களை
உன்னிடம் அனுபவித்தேனே

அன்னை அவள் பொய் கோபம்
உன்னிடமும் அப்படியே
பாசமிகுதியால் சின்னசின்ன சண்டை
நம்மிலும் நடக்கிறதே

என் அன்பு காதலா
நீயும் என் தாயின் சாயலே
உன் மடிமீது தலைவைத்து
நானும் சிறு குழந்தை போலானேனே

`அன்புடன் யசோதா காந்த் ~

6 Responses
  1. அப்படி ஒரு மடி
    அப்படி ஒரு பாசமான உறவு கிடைக்கத் தானே
    இருபாலரும் ஆண்டவனை தொழுதபடி உள்ளனர்
    அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்


  2. உண்மையான அன்பிற்கு தாயையே ஒப்பிட முடிகிறது அருமைங்க .


  3. Anonymous Says:

    சிறு குழச்தை போலாகித் தாயின் பாசம் உணரும் காதல் வாழ்க!..வாழ்த்துகள் சகோதரி.
    வேதா. இலங்காதிலகம்.


  4. நன்றி ரமணி அவர்களே ...


  5. நன்றி சசிகலா அவர்களே ...


  6. நன்றி சகோதரி வேதா இலங்கா திலகம் அவர்களே ....


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..