சினிமா........








இது ஒரு கனவு தொழிற்சாலை
அதிர்ஷ்டம் இருப்பவர் அரங்கேருவர்
இல்லாதவரோ அங்கலாய்ப்பார்

நட்சத்திரங்களுக்கோ
இதுவே உயிர் மூச்சு
நமக்கோ இதுவே பெரும்பேச்சு ...
கைக்கெட்டா தூரத்தில் கலர் வானம்
அதில் மின்னும் நட்சத்திரங்களோ கலைஞர்கள்
ஏற்றி விடும் ஏணிப்படிகளாய் மக்கள்
ஜெயிப்பவர் ஏராளம்
தோற்பவரும் தாராளம்
என்றும் வெற்றி கொடி நாட்டட்டும்
வாழ்த்திடுவோம் வாருங்கள் ! ...
தொடரட்டும் ...தொடரும்
இந்த தொடர் கதைகள் ...
~ அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. R.Gopi Says:

    ஆஹா... இயற்கை, காதலை தொடர்ந்து யசோ வடித்துள்ள இந்த சினிமா கவிதையும் நன்றாகவே இருக்கிறது...

    தொடர்ந்து எழுதுங்கள் யசோ....



எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..