சுடும் பார்வையால் என்னை சுட்டவளே
கடும் சொல்லால் கலங்க செய்தவளே
நெடும் தூரம் என்னை ஓடவைத்து
தடுமாறி தடம் புரள வைத்தாயே
பெரும் குற்றம் என்ன என்னிடத்தில் ?
காதலிப்பது குற்றம் என்றால்
இவ்வுலகில் காதலே குற்றமடி ..
உன் பார்வை தணியாதோ
உன் பூவிதழ் திறந்து காதலை சொல்வாயோ
மெல்ல மெல்ல உறிஞ்சும் என் உயிரை
ஒரேயடியாய் பறித்து விடு என் செல்லமே ..
உன் கையால் சாவென்பதும்
மகிழ்ச்சியடி எனக்கு ......
அன்புடன் யசோதா காந்த்
அருமையான கவி மழைச்சாரல் பாராட்டுக்கள்
நன்றி தமிழ்த்தோட்டம் ,,,அவர்களே
அருமை ..வாழ்த்துக்கள்
அன்புடன்
சமரன்
சமரன்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நன்றி நண்பா
மலரும் காதல் எல்லாம்
"மணவறைக்கு செல்வதில்லை........
யசோ....
காதல் யாசகம் மிக மிக நன்றாக இருக்கிறது... அவனின் கோரிக்கைக்கு அவளின் மனக்கதவு திறந்ததா? பதிலுக்காக “அவன்” ஆவலாக காத்திருக்கிறான்....