அரசியல் ...



அதை தருவோம் இதை தருவோம்
வாழ்க்கை  முறையை மாற்றி விடுவோம்
வசிய வார்த்தைகள் பல கேட்டோம்
சொற்கள்  வீச்சில் நிலை குலைந்தோம்

குழப்பங்களுடன் ஓட்டும் பதித்தோம்
கேட்டவைகள்  கிடைத்திட காத்திருந்தோம்
எதிர் பார்த்ததோ அட்சய பாத்திரம்
கிடைத்ததோ பிச்சை பாத்திரம்

அரசியல் சூதாட்டத்தில் பகடைகளாணோம்
அரசாங்கத்தால் என்றென்றும் ஏமாற்றபட்டோம்

ஒளிவீசும் விடியலுக்காய் விழித்திருப்போம்(???)
~அன்புடன் யசோதா காந்த்~

4 Responses
  1. அரசு இயல் என
    ஆள்பவர்களின் இயல்நிலைக்காய்
    பெயரிடப்பட்ட அரசியல் இன்று
    அரசு இல் ஆகிவிட்டது...
    சொன்ன சொல்லையும்
    கொடுத்த வாக்கையும் இல்லாமல்
    செய்வது இயல்பாகிவிட்டது.

    சுருக்கமா நச்சுன்னு சொல்லியிருகீங்க சகோதரி.


  2. // மகேந்திரன்
    October 23, 2011 5:07 AM

    அரசு இயல் என
    ஆள்பவர்களின் இயல்நிலைக்காய்
    பெயரிடப்பட்ட அரசியல் இன்று
    அரசு இல் ஆகிவிட்டது...
    சொன்ன சொல்லையும்
    கொடுத்த வாக்கையும் இல்லாமல்
    செய்வது இயல்பாகிவிட்டது.

    சுருக்கமா நச்சுன்னு சொல்லியிருகீங்க சகோதரி.//

    மனமார்ந்த நன்றிகள் அன்பு சகோதரரே !


  3. நாம் அட்சயப்பாத்திரங்கள் எதிர்ப்பார்க்கும் வரை நம்மை காமெடி கதாப்பாத்திரங்கள் ஆக்கி வைப்பார்கள் இந்த அரசியல் வியாதியர்கள் ...


  4. // நட்புடன் ஜமால்
    October 23, 2011 10:01 PM

    நாம் அட்சயப்பாத்திரங்கள் எதிர்ப்பார்க்கும் வரை நம்மை காமெடி கதாப்பாத்திரங்கள் ஆக்கி வைப்பார்கள் இந்த அரசியல் வியாதியர்கள் ...//

    உண்மை தான் நண்பரே .. எதிர்ப்பார்ப்புகளும் ஏமாற்றங்களும் மட்டுமே வாழ்க்கையாகி விட்டதே ..மனமார்ந்த நன்றிகள் ஜமால்!


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..