10/03/2011 09:21:00 PM
|
by யசோதா காந்த்
விவசாயி வீட்டிலோ
இறைவனுக்கு படையலிட்டும்
நேர்ச்சைகள் பல நேர்ந்தும்
வேண்டினான் மழை பொழிய .....
வழியோரத்திலோ
நாளிதழ்களை படுக்கையாக்கி
கிழிந்த கோணிப்பைகளை
போர்வையாக்கி
உறங்க காத்திருக்கும் ஏழையோ
இறைவனை வேண்டினான்
மழை பெய்யக்கூடாதென்று....
இறைவனுக்கும் குழப்பம்
.
~ அன்புடன் யசோதா ~
ரோட்டில் இருக்கும் அந்த மனிதனுக்கு வீடு கொடுத்து பின்பு மழை கொடுக்கட்டும்
நன்றி pearl அவர்களே .....