வண்ண வண்ண கோல மாவெடுத்து
வாசலில் தினமும் கோலமிட்டு
சின்ன சின்னதாய் போடாமல்
வீதியின் பாதிவரை போடுவதேன் ?
கால் கடுக்க நிற்கும் உன்னை
நானும் நெடுநேரம் காண தானே
இட்ட கோலங்கள் அழியாமலிருக்க
எனது விழிகளை அல்லவா
வாசலில் வைத்தேன்
என்னவேண்டும் என்ற தந்தையிடம்
கோல புத்தகங்களுக்கல்லவா
வாசலில் தினமும் கோலமிட்டு
சின்ன சின்னதாய் போடாமல்
வீதியின் பாதிவரை போடுவதேன் ?
கால் கடுக்க நிற்கும் உன்னை
நானும் நெடுநேரம் காண தானே
இட்ட கோலங்கள் அழியாமலிருக்க
எனது விழிகளை அல்லவா
வாசலில் வைத்தேன்
என்னவேண்டும் என்ற தந்தையிடம்
கோல புத்தகங்களுக்கல்லவா
கோரிக்கை வைத்தேன் ..
எண்ணங்களை கோல பொடிகளாக்கி
நம் காதலை அல்லவா
எண்ணங்களை கோல பொடிகளாக்கி
நம் காதலை அல்லவா
புள்ளி இட்டு கோலமாக்கினேன் ...
அதிகாலை குளிர் தொல்லை
அதிகாலை குளிர் தொல்லை
மார்கழி வரை காக்க மனமில்லை
வந்து விடு மனதை தந்து விடு
வரும் காலை பொழுதுகளில்
நம் வாசலில் நான் கோலமிட
உன் கண்களோ அதை நோக்க
இனிய நினைவுகளாய் வாழ்ந்திடுவோம்
வரும் காலை பொழுதுகளில்
நம் வாசலில் நான் கோலமிட
உன் கண்களோ அதை நோக்க
இனிய நினைவுகளாய் வாழ்ந்திடுவோம்
அழகாய் அழியா கோலங்களாய்
~அன்புடன் யசோதா காந்த் ~
உங்கள் பிளாக் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://www.hotlinksin.com/ இணையதளத்தில் பதிவு செய்து பதிவுகளை பகிருங்கள்.
இனிமையான கவிதை
இனிமையான கவிதை
இனிமையான கவிதை
நன்றி லதானந்த் அவர்களே ..
நன்றி ..HOTLINKSIN