பூக்களிடம் கதைபேசி மயக்கி
தேன் பருக காத்திருக்கும்
வண்டுகள் கூட்டம்கூட்டாய்
அரண்மனை கருவூலத் தேனை
எதிரிகள் களவாடாமல் இருக்க
வாளோடு காவல் காக்கும்
தேனீக்கள் கூட்டம் கூட்டமாய் ...
வண்ண வண்ண ஆடைகளோடு
வானத்தில் வட்டமிட்டு
சிறகடித்து பறக்கும்
வண்ணத்து பூச்சிகள் கூட்டம் கூட்டமாய் ...
இரவினிலே தீப்பந்தங்களோடு
போராட்டம் நடத்தும்
மின்மினி பூச்சிகள் கூட்டம் கூட்டமாய்
உறவுகளுக்கு விருந்து கொடுக்கவும்
நல்லவையா கெட்டவையோ எதுவானாலும்
பாட்டு பாடி கூட்டம் கூடும்
காக்கைகள் கூட்டம் கூட்டமாய்
ராணுவத்தில் சேர்வதற்க்காய்
பயிற்சி எடுத்தும் வரிசை நடத்தும்
எறும்புகள் கூட்டம் கூட்டமாய்
இத்தனை உயிர்களும்
கூட்டம் கூட்டமாய்
தம்முள் ஒற்றுமையாய்
நாமோ கூடி வாழாது
வேற்றுமையாய் ஏனோ ??
~ அன்புடன் யசோதா காந்த் ~
நல்லா கேட்டீங்க போங்க... த.ம 2
கவிநயம் சிறகடித்து பறக்கிறது சகோதரி...
நன்றி விச்சு அவர்களே ,,,
நன்றி சகோ மகேந்திரன் அவர்களே ..