1/21/2012 01:36:00 PM
|
by யசோதா காந்த்
இணைந்து நாம் வாழ்ந்ததோ
முத்தான முப்பது வருடங்கள்
எனக்கு அவரும்
அவருக்கு நானும் அன்பாய்
எல்லநேரங்களிலும் ஆதரவாய்
இணைபிரியா நாட்கள்
மனைவி சொல் கேட்டோ மகனோ
பிரித்துவிட்டான்
வெவ்வேறு முதியோர் இல்லங்களில்
இனி என்று சேர்வோமோ ?
ஏக்கத்துடன் என் மனம்
மரணத்தை நோக்கி ..
~`அன்புடன் யசோதா காந்த் ~
சுருக்கமான ,விளக்கமான கருத்து.
முதுமை மிக கொடுமை
பிரிந்து வாழ்வது அதைவிடகொடுமை
இருந்தும் ஒன்றுதான் அல்லது இறந்தும் ஒன்றுதான்
பெற்ற பிள்ளைகள் எண்ணிப் பாரப்பது இல்லை!
அழகாகச் சொன்னீர்கள்
புலவர் சா இராமாநுசம்
அவர்களின் அன்யோன்யத்தை
அந்தப் படம் மிக மிக அழகாகச் சொல்லிப் போகிறது
(முதல் வரி இணைந்து இருந்து வாழ்ந்ததோ
என இருக்கவேண்டுமோ )
அருமையான படைப்பு
தொடாவாழ்த்துக்கள்
Tha.ma 4
நன்றி சுவடுகள் ...அவர்களே
நன்றி புலவர் சா இராமானுசம் அவர்களே ...
நன்றி ரமணி அவர்களே ...