நட்பு ...







எல்லை இல்லா வனத்தில்
உயரே உயரே பறக்கிறேன்

கள்ளமில்லா சிரிப்பினை
கனவினிலும் கூட சிந்துகிறேன்

அன்பு எனும் அடைமொழியால்
அணையா விளக்காய் எரிகிறேன்

ஆண்  பெண் என்ற பாகுபாடின்றி
அன்பின் நட்புக்களினால் மிளிர்கிறேன்

இறைவன் அருளிய  நட்பு உறவுகளை
கற்பென காத்து போற்றிடுவேன்

~அன்புடன் யசோதா காந்த் ~

2 Responses
  1. நட்பிற்கு கூட கற்புண்டு தான் தோழி...அருமை...தொடரட்டும்.


  2. நன்றி தோழி சுபஸ்ரீ மோகன் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..