பெண்மை சாபமோ....







பெண்மை சாபமோ....
*************************************

நெஞ்சம் பொறுக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மானிடரை
நினைக்கையிலே ....

இந்தவரிகள் எத்தனை உண்மை வரிகள் ...

பெண் என்பவள் ..தாயாய் ..சகோதரியாய்,,மனைவியாய் ..குழந்தையாய் ..இன்னும் பல உருவங்களில் இந்த உலகத்தை வலம் வருகிறாள் ..அப்படி பட்ட பெண்ணை மரியாதை கொடுத்து அன்பு செலுத்துவோர் பலர் ..ஆனால் பெண்ணை போதை பொருளாய் சிலர் பார்ப்பதால் ஆண் வர்க்கத்திர்க்கே தலை குனியும் நிலை அன்றோ ...
இன்றைய நாட்களில் பல அதிர்ச்சியான செய்திகள்...காண்கிறோம் கேட்கிறோம்
நம் மனமோ வேதனையில் ..
·         பெற்ற தந்தை குடும்பத்தை போற்றி காவல் காப்பவர் ..அந்த தந்தையே பெற்றமகளின் பெண்மையை சூரையாடினால் ????????
·         அன்பு கூடி உலாவரும் உறவினர் உருவில் கயவர்கள் பாலியல் வன்முறைகள் செய்தால் ????????
·         நண்பனாய் ,,காதலனாய் நம்பிய ஒருவன் அவளை வஞ்சித்து விலைபேசி பலருக்கும் இரையாக்கினால் ??????
·         மாதா , பிதா ,குரு தெய்வம் இதில் மூன்றாம் இடத்தில்  இருக்கும் ஆசிரியர்களே மாணவிகளை காம வெறிக்கு பலியாக்கினால் ????????
எத்தனை எத்தனை கொடூரம் .????..

அந்த நாட்களில் பெண்குழந்தைகளை  வெளியில் விடாமல் கண்ணுக்குள் வைத்து வளர்த்தனர் ..அதைக்கூட நாம் பெண் அடிமைத்தனம் என்றோம், ..அது அடிமைத்தனம் அல்ல பாதுகாப்பு வளையத்தில் காத்து வைத்து இருந்தார்கள் என இப்போது அல்லவா புரிகிறது ...
இன்றைய நாட்களில் பெண் குழந்தைகளை படிக்க அனுப்பும் போதும் வேலைக்கு அனுப்பும் போதும் வயிற்றில் நெருப்பை கட்டி கொண்டு அல்லவா காத்து  இருக்கிறோம் ..

தொடர்ந்து நடக்கும் கொடூரங்களை எப்படி தடுப்பது??
மனித உருவில் மிருகமாய் உலவும் காமக்கயவர்களை எப்படி தெரிந்துகொள்வது ??...இதற்க்கு என்ன செய்வது ??
என்று தீரும் இந்நிலை ??

உங்களில் ஒருத்தியாய் நானும் குமுறுகிறேன் ...
விடை தேடி அலைகின்றேன் ...

~அன்புடன் உங்கள் யசோதா காந்த் ~

2 Responses
  1. தனிமனித ஒழுக்கம் வளர வேண்டும்... வளர்க்க வேண்டும்...


  2. நன்றி திண்டுக்கல் தனபால் அவர்களே ...


எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..

நன்றிகளோடு
யசோதா காந்த் ..