விதைக்கும் விதைகள் எல்லாம்
செடிகளாய் முளைக்குமா ?
முளைக்கும் செடிகளெல்லாம்
மரங்களாய் வளருமா ?
வளர்ந்த மரங்கள் எல்லாம்
உயிரனங்களுக்கு நிழல் தருமா ?
நிழல் தரும் மரங்கள் எல்லாம்
நெடுநாள் உயிர் வாழுமா?
நெடுநாள் வாழும் மரங்கள் எல்லாம்
பூத்து காய்த்து கனி தருமா ?
பூக்கும் கனிகள்ளெல்லாம்
தகுந்த இடம் போய் சேருமா ?
அடுக்கடுக்காய் கேள்விகள்
விடை தேடும் விடைகள்
~ அன்புடன் யசோதா காந்த் ~
நல்ல அருமையான கவிதை
செ,கதிர் வேலு ......நன்றி நண்பரே