ஒவ்வொரு வயதிலும் பலவகை ஆசைகள்
சொந்தங்கள் மீது தீராத காதல்கள்
சேர்ந்திருக்கும் போது பூத்திடும் மகிழ்ச்சிகள்
பிரிவுகளில் தாங்கமுடியாத துயரங்கள்
காலங்கள் தரும் அனுபவங்கள்
நிரந்தரமாய் தாக்கும் சோகங்கள்
அருவியாய் கொட்டும் தத்துவங்கள்
மறந்த கடமைகள் ...
மறுத்த உண்மைகள் ..
கல்யாணம் எனும் பந்தங்கள்
அங்கேயும் அரங்கேறும் நாடகங்கள்
சொல்லும் கதைகள் சில
சொல்லாத கதைகள் பல
காட்சி முடிந்த பின்னும்
கலைய மறுக்கும் வேஷங்கள் ......
~ அன்புடன் யசோதா காந்த் ~
~ அன்புடன் யசோதா காந்த் ~
உண்மையான முகத்துக்கு வேஷம் அவசியம் தான் தோழி
நன்றி நண்பரே ....தீண்டா மெளுகுகள்