ஒரு கொடியில் மலரவில்லை
தொப்பிள்கொடி உறவுமில்லைரத்த பந்த சொந்தமில்லை
துன்பத்தில் தோள் கொடுக்கவும்
இன்பத்தில் குதூகலிக்க .
துவண்ட பொழுதில் தூக்கி நிறுத்தவும்
என் உடன் பிறப்பாய்
எங்கிருந்தோ வந்தான்
அண்ணன் உன் துணை நான் என்றான் ...
ஆனந்தமாய் ஊஞ்சல் ஆடுகிறேன் ..
~ அன்புடன் யசோதா காந்த் ~
(எனது உடன் பிறவா அண்ணன் ஒப்பிலியன் பாலு அவர்களுக்காக ... )
எனது
எண்ணங்களின் கடலில்
இதமாக வீசும் இந்த அலைகளில்
உங்கள் மனதின் ஓசைகளும்
இசையாகட்டுமே ..
நன்றிகளோடு
யசோதா காந்த் ..